உன் காதலை-என்
காதில் ஓதும் நேரம்...
செவ்வானச் சூரியன் போல்
சிவக்கும் என் கன்னங்கள்.....
பத்தாயிரம் வர்ணங்களை
ஒன்று சேர்த்து தீட்டிய
ஓவியம் போன்ற
உன் மார்பில் தலை
சாய்க்கப் போகிறேன்.....
நாளையும் பொழுதையும்
மறந்து
நான் என்ற நிலை கடந்து
நீயாகும் நேரம்.......
ம்ம்ம்...
அட இது கற்பனைதானா....
என் காதலின் நாயகனே,
உன் நாடகத்தை
நிறுத்தி விடு...
நீ நண்பனல்ல....
காதலன் என்று கூறிவிடு.....
Wednesday, January 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
உனது காதல் எல்லைகளை தாண்டாது இந்த பிரபஞ்ச கூட்டுக்குள் அடங்கிக்கிடந்தால் தோழி கவிதைகள் மட்டுமே மிஞ்சும் இறக்கைகள விரி பற மேலிருந்து
ReplyDeleteஇந்த புவியை பார்க்க கற்றுக்கொள் நீ தான் மிக சிறந்த காதலியாக தென்படுவாய் உன்னவனுக்கு