skip to main |
skip to sidebar
காதலில் தொலைவது
காதலர்கள் மட்டுமல்ல!
சில கடமைகளும் தான்!!
உன் விரல்களின்
இடைவெளியில்
என் இரவுகள்
அடங்கிப்போகின்றன!
சில நேரங்களில்
மூழ்கும் படகினை
கனவில் காண்கிறேன்!
படகு நான்
கடல் நீ!
தெரிந்தவுடன்
கனவினைத் தேட
இரவில் மூழ்குகிறேன்!!
உன் இலக்கணமற்ற
மௌனம்
நீ என்ற
இலக்கியத்தை
காட்டுகிறது!
தூரம் அதிகமாகும் போது
உன்னை
நினைக்கும் நேரமும்
அதிகமாகும்
இருபது வயது குழந்தையை
தாங்கும் இனிய கருவறை!
அப்பா.
நானும் நதி தான்
உன்னால்!
நேற்று
வற்றி கிடந்தேன்!
இன்று
காதல் வெள்ளம்!
காதல் போர்க்களம் தான்!
இரவும் பகலும்
தூக்கம் விழிக்கிறேன்!
என் வாழ்கையை
புரட்டிப்பார்கிறாய்!
பின் எழுதியது
நீ என
கைஎழுத்திடுகிறாய்!
உன்னை வெறுக்க
நான் எடுக்கும்
சபதமும்,
அதை அப்போதே
அழிக்கும்
அபத்தமும்........