Monday, August 15, 2011

காதலில் தொலைவது 
காதலர்கள் மட்டுமல்ல!
சில கடமைகளும் தான்!!

Thursday, August 11, 2011

உன் விரல்களின் 
இடைவெளியில்
என் இரவுகள் 
அடங்கிப்போகின்றன! 
சில நேரங்களில் 
மூழ்கும் படகினை
கனவில் காண்கிறேன்!
படகு நான்
கடல் நீ!
தெரிந்தவுடன் 
கனவினைத் தேட
இரவில் மூழ்குகிறேன்!!
உன் இலக்கணமற்ற 
மௌனம்
நீ என்ற 
இலக்கியத்தை
காட்டுகிறது!

Wednesday, August 10, 2011

தூரம் அதிகமாகும் போது 
உன்னை
நினைக்கும் நேரமும் 
அதிகமாகும் 
இருபது வயது குழந்தையை 
தாங்கும் இனிய கருவறை! 
அப்பா. 


Friday, March 11, 2011

நானும் நதி தான் 
உன்னால்!
நேற்று 
 வற்றி கிடந்தேன்!
இன்று
காதல் வெள்ளம்! 
காதல் போர்க்களம் தான்!
இரவும் பகலும்
தூக்கம் விழிக்கிறேன்!

என் வாழ்கையை 
புரட்டிப்பார்கிறாய்!
பின் எழுதியது
நீ என
கைஎழுத்திடுகிறாய்! 

உன்னை வெறுக்க 
நான் எடுக்கும் 
சபதமும்,
அதை அப்போதே
அழிக்கும்
அபத்தமும்........