கருவிழி தேடும்
கடவுள் நீ!
உன் ஒன்பது மணி
முத்தம்
என்னில் கண்ணீர்
வழிய வைக்கும்!
மாலை வரை
எதிர்பார்த்த
மனது
இப்போது தேம்புகிறது!
இமை மூட
உன் நெஞ்சம்
தேவை,
எங்கே சென்றாய்!
உனக்கும் எனக்கும்
உள்ள உறவு
இதுவரை
விளங்கவில்லை எனக்கு!
நீ அடிக்கடி
கேட்பதால்
அழைக்கிறேன்!
அப்பா!!
Wednesday, January 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment